மனு முறைகண்ட வாசகம் - திரு அருட்பிரகாச வள்ளலார்
இதை படிக்கும் பொழுது எனக்காகவே வள்ளல் பெருமான் எழுதியது போன்ற உணர்வு. நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ! மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ! குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ! ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ! தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ! மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ! உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ! களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ! பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ! வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ! வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ! பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ! இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ! கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ! நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ! கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ! கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ! காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ! கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ! கருப்பமழித்துக் களித்திருந்தேனோ! குருவை வணங்கக் கூசிநின்றேனோ! குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ! கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ! பெரியோர் பாட்டிற் பிழைசொன்